உடைந்த வளையல்களும் சில கிறுக்கல்களும்

உயிர் மையால்
எழுதப்பட்ட காதல் கடிதம்
திருத்தும் சிகப்பு பேனா

கைகோர்த்து ஜோடிகள்
போகும் பாதை பக்கம்
ஒர் ஒத்தையடி பாதை

முத்தம் கொடுக்கும் காட்சி
பிம்பமாய்
உடைந்த கண்ணாடியில்

உருவிய முத்து மாலை
கோர்க்கும்
கண்ணீர்த்துளிகள்

பனித்துளிகள்
படர்ந்த தேகம்
ஊசிகளாய் குத்தும்
சிலர் மனசில்

மவுனமாய்
நிகழும்
ஒரு மாறுப்பட்ட மரணம்

சிரிப்போடு அழுகையும்
காட்டிக்கொள்ளாமல்
தனக்குள்
சமரசம் செய்யும்
காதலித்த மனசு

1 மறுமொழிகள்:

At , Blogger அத்திவெட்டி ஜோதிபாரதி மொழிந்தது...

கவிதை நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள்! இடையூறு அதிகம்தான் அப்போது!! அது இல்லை இப்போது!!!

அன்புடன் ஜோதிபாரதி

http://jothibharathi.blogspot.com

 

Post a Comment

<< முகப்பு