சுவடுகள்

நான் பிறந்தேன்
வருட முறை வரும்
கொண்டடாத பிறந்த நாள்
பிறப்பின் ஞாபக சுவடு

நான் வாழ்ந்தேன்
நினைவில் நிறுத்தி
உண்மை சொல்லும்
சுவடுகள் பற்பல
கண்ணீர் கொப்பளத்தில்
பிம்பம் பார்ப்பது போல்
காயத் தழும்புகளாய்
அங்கங்கே
பத்தரமாய் பதமாய்
இருக்கும்

நினைவு அவிழ்ந்தால்
உடை அவிழ்ந்தால் வரும்
கூச்சம் அச்சம் அவமானம்
உடை உடுத்திக் கொள்ளும்
சில சுவடுகள்

சில்லாய் ஒரு சு- வடு
முதல் முறை சொல்லாமல்
அவள் பெயரை
பென்சிலால் எழுதினேன்
கூச்சத்தால்
அழித்தும்
அச்சாய் அழியாமல்
காலத்தோடு வாழ்கிறது
காதல் சுவடாய்
மலாயா வரலாறு
பாடப் புத்தகத்தில்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு