முகவரிகள்

நான்
நல்ல மகன்?
என் நாவில் நரம்புயிருக்கிறது
அதனால் சொல்ல தெரியவில்லை.

நான்
நல்ல அண்ணன், தம்பி?
மாமன், மச்சான்?
அவை எனக்கு பொறுந்தவில்லை.

நான்
நல்ல காதலன்?
என் காதல் கவிதைகள்
வந்து இதயம் வெட்டும்
நான் லாயக்கற்றவன்.

நான்
நல்ல கணவன்?
நல்ல தகப்பன்?
அந்த ஆண்டவன்
எனக்கு அருள் புரிவனாக.

நான்
நல்ல நண்பன்?
விரல்களால் எண்ணும் நண்பர்கள்
மனம் விட்டு உறுதிபடுத்துவார்கள்.

நான்
நல்ல தமிழன்?
கண்ணீர் அஞ்சலியில்
வாசிக்கப்படலாம்.

நான்
நல்ல மனிதன்?
கடைசி யாத்திரையில்
எனை தூக்கிச் செல்லும்
அந்த மகா மனிதர்கள்
சொன்னால் போதும்.

நான்
நல்ல கவிஞன்?
பிற்காலத்தில் என் எழுத்துக்கள்
பொய் சொன்னாலும் சொல்லும்.

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு