தூதுப்போ இதயமே...
மார்ப்பில் ஊறும் உயிரே...
எப்படி எழுதி
உனை மயக்குவது
என தெரியவில்லை
அதையும் நான்
விரும்பவுமில்லை!
இந்த நிமிஷம்
உண்மையாக எழுத
வேண்டும்!
உள்ளம் வலிய
எழுத வேண்டும்!
உனக்காக
எழுத வேண்டும்!
இந்த வார்த்தைகள்
என்னோடு
எந்த நிமிஷமும்
இருக்க வேண்டும்
என் உயிராய்!
என்னிடம்
எதுவும் இல்லை
நீ மட்டும்!
நீ மட்டும்
என் பக்கமிருந்தால்
எனக்கு
எதுவும் தேவையில்லை!
நீ வரும் போது
வாழ்க்கையும் கூட வருகிறது
வாழ்ந்துப் பார்க்க
ஆசையும் வருகிறது.
நேற்று என் கனவில்
வைரமுத்து தோன்றினார்
உற்ச்சகமாய் கேட்டார்
கேட்டது....
' உனக்கும் எனக்கும்
சம்திங் சம்திங்? '
'நத்திங் நத்திங் '
என படப்படத்து
சொன்னேன்.
'' மறைக்கதே!
மறைக்கதே!
மறைத்து
மரியாதே! ''
என எச்சரித்து
மறைந்து போனார்.
என்று என்று
என்க்கு காதல் பிரசவிக்குமோ
அன்று அன்று
அவருக்கு கவிதைத் தீபாவளி.
எனையறியாமல்
'கண்ணாம் மூச்சி ஆட்டம் ஏனட'
எனப் பாடலை
திரும்ப திரும்ப
கேட்கிறேன்
திருத்தித் திருத்தி
ஒரு அர்த்தம் மட்டும்
திண்ணமாக புரிக்கிறது
என்னுள்
அப்பாடலில்
நீயாய் கேட்கிறாய்
'' என் மனம் உனக்கொரு
விளையாட்டு பொம்மையா?
எனக்கென உணர்ச்சிகள்
தனியாக இல்லையா? ''
சுயநலமாய்
சுகத்தைத் தேடி
உடைந்துப் போனேன்!
என் சார்ப்பில்
அந்த கேள்வியைக்
கேட்டால்
எப்படி பதிலளிப்பாய்
எதிர்ப்பார்க்கிறேன்
உண்மையில்
நீயும்
நானும்
பொம்மைகள்
விளையாட வைப்பது
இந்த பொம்மையான
உலகம்!
நீயே
விடையைத் தேடி
உள்ளத்தை
தொடுக்கிறாய்
'' நொஞ்சின்
அலை
உறங்காது ''
உன் இதய உளரல்களோடு
உயிரைக் கோக்குகிறாய்
'' இறுதியில்
உனைக் கண்டேன்
இருதயப் பூவில்
கண்டேன் ''
நானும் கண்டுக்கொண்டேன்
கண்டுக்கொண்டேன்
கண்டுக்கொண்டேன்
என் காதல் முகம்
கண்டுக்கொண்டேன்
விரல் தொடும்
துரத்திலே
என் வெண்ணிலவே
நான் கண்டுக்கொண்டேன்
பொருளைத் தேடி
வருகிறது வாக்கியம்
நீ பொருள்!
நான் வாக்கியம்!
வெளிச்சம் தேடி
வருகிறது சூரியன்
நீ வெளிச்சம்!
நான் சூரியன்!
ஈரம் தேடி
வருகிறது மழை
நீ ஈரம்!
நான் மழை!
அமைதி தேடி
அலைக்கிறது மனம்
நீ அமைதி!
நான் மனம்!
உறவைத் தேடி
அலைக்கிறது உரிமை
நீ உறவு!
நான் உரிமை!
சுவாசம் தேடி
அலைக்கிறது காற்று
நீ சுவாசம்!
நான் காற்று!
உனைத் தேடி
வருவதுதான் அழகு
நீ என் அழகு!
-தொடரும்
0 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯