ஓ காதலே...
ஓ காதலே...
உனக்கோர் கடிதம்
எழுதும் எதை நான்
ஒரு சொல்லில் உயிர் நான்
உருகும் என் கவிதை
உளரும் என் வெறுமை
காதல் கொடுத்தேன்
கண்ணீர் கொடுத்தாய்
கவலையில்லை
மண்ணில் மீண்டும்
மலர்கள் மலரும்
உள்ளம் என்ன?
வெறும் பள்ளம்
விழுந்து
எழுந்து நிற்க்கும்
குழந்தை
நான் தான்!
காயம் என்ன?
வாழ்வின் சாயம்
வெளுத்துப் போகும்
காலம் கடந்து
காதல் வந்தால்
கவிதைக் கொடுக்கும்
நன்றி சொல்வேன்
நாளை எவளோ?
என் தேடல் வலியாய்
என் தேடல் புதிராய்
என் தேடல் இருளாய்
எல்லாம்
காலம் வரும் வரைத் தான்
ஓ வானமே...
நீ என் எல்லை
ஒரு நாள் தொடுவேன்
அடைவேன் உனை நான்
அகிலம் எனது.
---------------------------------
மையம் கொண்ட சூறவாளி
அமைதியடைந்தப்போது,
எழுதிய கவிதை.
0 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯