குழந்தை

குழந்தை -
ஓர் விஞ்ஞான வியப்பா?
ஓர் அற்புதப் படைப்பா?

குழந்தை -
கடவுளின் அருளா?
அவனின் பொருளா?

குழந்தை -
இனம் பொருக்கும் பிறவியா?
அறிவு சேர்க்கும் அமுதசுரபியா?

குழந்தை -
வாழ்க்கை ஆனந்தத்தின் பன்னீரா?
அதன் அவலங்களின் கண்ணீரா?

குழந்தை -
செலவான உறவுகளின் அழகா?
செல்லாத உறவுகளின் அழுக்கா?

குழந்தை -
அவசரக் காதலின் முத்தமா?
தேதி குறிக்காத முகூர்த்தமா?
முடிந்துபோகும் அந்த முத்தமா?

குழந்தை -
தனித்திருக்கும் தாய்மார்களுக்கு
சாவல்களை சமைத்த போராட்டமா?
சங்கடங்களை கிழிக்கும் பேரின்பமா?

குழந்தை -
மனித வளர்ச்சிக்குப் பாலமா?
சமுதாய பிரச்சனைகளின் பள்ளமா?

குழந்தை -
உலகின் எதிர்கலாமா?
வளர்ந்து வரும் அடிமை எந்திரங்களா?

குழந்தை -
அடுத்த அப்துல்கலாமா?
போர்க்களத்தின் மனித அணுகுண்டுகளா?

குழந்தை -
அனாதையென தெரிந்தால்
பிறப்பது பாசமா?
பார்த்தால் பாவமா?

குழந்தையெலாம் ஓர் வினா!
ஓர் வாழ்க்கை வினா.
விடை தருவது நாம்
அதை நன்று சிந்தித்து சீர்தூக்கி
சிறப்பாய் எழுதுவோம் நாம்!


--------------------------------------

எனக்கு முகவரி தந்த கவிதை
சிங்கையில் இளைய கவிஞன்று
தமிழ் முரசில் இரு முறை பிரசுரமானது
அளவில்லா களிப்படைந்தேன்

மீண்டும்....
எனை குழந்தையாக்கிய
ஹய்ருனுக்கு
என் நன்றிகளும்
இதய சமர்ப்பணமும்!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு