காதலும் மதமும்
'காதல்' கொண்டு
உருவாகும் மதம்.
மதம் கொண்டு
உருளும் காதல்.
காதல் பிடித்து
அலையும் ஒரு தலை.
மதம் பிடித்து
உருளும் பலர் தலை.
காதல் பிரிந்தால்
ஓருயிர்.
மதம் பிரிந்தால்
ஒரு சமுகம்.
காதல்
உள்ளத்தின் உயிர்.
மதம்
இறைவனின் முகம்.
காதல் - ஜனனம்.
மதம் - மரணம்.
சமயம் பார்த்து
வருவதில்லை
காதல்.
சமயங்கள் வழிப்பட்டு
வளர்வது
மதம்.
காதலுக்கு வேண்டும்
இரு
மனம் சம்மதம்.
மதத்திற்கு மட்டும் போதும்
ஒரு
மனம் சம்மதம்.
காதல் இருந்தால்
உயிர்க்காலம் வரை
வாழ்வான் மனிதன்!
மதம் இருந்தால்
உயிர் முடிந்து
வாழ்வான் மனிதன்......?
காதல்....
மனிதனின் மதம்!
0 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯