எழுத வேண்டும்

கண்விழி வழியே
செவி வழி நுலையே
நினைத்ததை நான் எழுத.

மனசு அறியே
இதயம் திறக்க
நினைத்ததை நான் எழுத.

வெளிச்சம் உதிர
ஞானம் வளர
நினைத்ததை நான் எழுத.

காதல் கொள்ள
கவிதை புனைய
நினைத்ததை நான் எழுத.

கனவு விதைக்க
நனவு தளிர
நினைத்ததை நான் எழுத.

நெஞ்சம் மகிழ
கவலை விலக
நினைத்ததை நான் எழுத.

உலகம் பழக
உரிமைகள் தெரிய
நினைத்ததை நான் எழுத.

நினைவுகள் மலர
உள்ளம் நெகிழ
நினைத்ததை நான் எழுத.

நினைவாக நானிருக்க
நிசமாக நானிருக்க
நினைத்ததை
நான் எழுத வேண்டும்!

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு