சில்லென்று மழை....


வாய் மட்டும் பேசாமல்
புது மொழியெலாம் பிறப்பு
முகம் மட்டும் பாராமல்
உடலெலாம் நெருப்பு

விழிகளில் உருவெடுக்கும்
இதமாய் உயிர் பறிக்கும்
நிழல் மட்டும் பார்த்தாலே
நிஜமாய் இனித்துவிடும்

ஓடும் விளையாடும்
மூச்சுக்கள் குடியேறும்
மாறும் தடுமாறும்
தவிப்பில் இழைப்பாறும்

நேசம் வடிவமைக்க
விண்மீன்கள் குடைப்பிடிக்க
நீ எழுதும்
கவிதை தோற்றுப்போகும்
அவள் முன்னால்

மோகம் தலைவிரிக்க
தூரம் கைப்பிடிக்க
ஏக்கம் அழுவும்
உன் முன்னால்

மூச்சு வடிவில் ஒரு காதல்
முத்தம் வடிவில் ஒரு மோகம்
இது நடுவில் கவிதை ஓடும்
ஒன்றோடு ஒன்று சேராமல்
உலகம் மட்டும் ஓய்ந்திடும?

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு