எவனோ ஒருவன்...

எவனோ ஒருவன் வாசிக்கின்றான்
வசியம் செய்யாமல் நேசிக்கின்றான்
எதை எதையோ யோசிக்கின்றான்
எதையும் சொல்லாமல்
எல்லை மிறாமல்
எண்ணம் மாறாமல்
ஏங்கித் தவிக்கின்றான்

மெல்ல மெல்ல
என் இதயம் திறந்து பார்க்கின்றான்
வெல்லத் தெரியாமல்
அடிக்கும் அலைகளில் தத்தளிக்கின்றான்

தீக்குச்சி போல் என் கனவுகளின் எறிக்கின்றான்
ஈக்குச்சி வைத்து
கவிதைகள் இதயத்தில் கிறுக்குகின்றான்

உருகும் அவன் விழிகளில்
உருகும் மெழுகுவர்த்தியாய் உருகுகின்றேன்
உருகும் மெழுகை அழகாய் காதல் மை பூசி
கண் இமை சிமிட்டாமல் காத்திற்கின்றான்

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு