வியாழன், ஜூலை 06, 2006

இளமையில் ஒர் முதுமை

திரையில் வரும்
பிரசவக் காட்சிகள்
எனக்குரிய
தகப்பன் உணர்வுகளை
பிரித்து வைக்கும்.

சின்ன குழந்தைகள்
என் முகம் பார்த்து
பூக்கும்போது
தந்தையடையாத
பிரசவ வலி
என்னுள்.

அந்த பிஞ்சுக் கால்கள்
மார்பை
உதைக்கும்போது
எனக்குரிய
தகப்பன் கதவைத்
தட்டுவதாய் கேட்கும்.

அண்ணன் பையன்
''சித்தப்பா, சித்தப்பா''
என அழைக்கும்போது
ஆசையாய்
அலைகள்
என் கறையைத் தேடும்.

இவ்வாறு...
எண்ணங்கள் ஏங்கி
தனிமையில் தவிக்க

இயல்பாய் அடைக்கிறேன்
இளமையில்
ஒர் முதுமை.
-------------------------------
இதை எழுதும் போது
வயசுக்கு மிறிய கருத்துக்கள்
என சில விமர்சனங்கள் வந்தன.
எதையும் கிழ்த்தனமாக எழுதவில்லை!
என் புனித உணர்வுகளைப் படம்பிடித்தேன்
சின்ன சின்ன 'கௌரவ ஆசைக்களை'
இடையில் பின்னியும் வைத்தேன்
பிள்ளைக் கனவோடு...

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு