புதன், ஜூலை 05, 2006

முதல் முதலாய்...

முதல் முதலாக உன் குரல் கேட்டு
மகிழ்ச்சி மழையில் நான் நனைவேன்
முதல் முதலாக என் பெயரை
நீ உச்சரிக்கும் போது
மீண்டும் உயிர் நான் தறிப்பேன்
உன் மின்சாரப் பேச்சு
எனக்குள் பாய்ந்து
என்னுள்ளே என்னன்ன செய்யும்
இது காதலா?
வலிபக் காய்ச்சால?
தாங்காதே
இனி தனிமை தாங்காதே...

அழகும் அறிவும் நிறைந்தவள்
நீ தானே
என் கனவுக்கும் நனவுக்கும்
நடுவில் ஓடும் ஒரு நதி
நீ தானே

வானம் என் பக்கம்
நீ வந்தால் சொர்க்கம்
புதிர் போடும் பெண்ணே
பதில் சொல்லாவிட்டாலும்
உன் பதில் நான் தானோ
உன் இம்சைகள் வேண்டும்
அதில் இன்பங்கள் கண்பேன்

கொள்ளாதே
என் ஓருயுரிரைக் கொள்ளாதே

பகலும் இரவும் பொருள் மாறிப் போனது
எல்லாம் உன்னால் தான்
பொய்யும் மெய்யும்
பொருள் மாறிப் போனலும் போகும்
எல்லாம் உன்னால் தான்
நரகமும் சொர்க்கமும்
இப்ப கிட்ட கிட்ட இருக்கு
எல்லாம் உன்னால் தான்

கண்ணுக்குள் மாயம் காட்டி
இதயத்தில் காயம் தீட்டி
நீ எனை ஏமாற்றி போனால்
என் உயிர் மரிக்காது
உனை நினைத்து என் உயிர் மறுகுமே

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு