வியாழன், ஜூலை 06, 2006

உந்தன் முதல்...

முதல் பார்வை -
இவ்வுலகிற்கு கொண்டுவந்தவரின் பார்வை
முதல் ஒலி -
எல்லொருக்கும் இனிக்கும் சங்கிதம்
உன் முதல் அழுகை
முதல் வார்த்தை -
உன் அன்னையை
பெருமை படுத்தும் 'ம' 'ம்ம்மா'
முதல் பரிசு -
உன் பெற்றோரின் அரவணைப்பு
முதல் கனவு -
வாழ்வில் சிறக்க!
முதல் மயக்கம் -
காதல் மயக்கம்
முதல் காதல் -
உன் உள்ளத்தைக் கிள்ளும்
முதல் முத்தம் -
உன் உயிரைத் திருடும்
முதல் குழந்தை -
உந்தன் வாழ்வின் மறுபிறவி
முதல் வெற்றி -
சமுகத்தில் உனக்கோர் தனியிடம் -
மரியாதை
முதல் இழப்பு -
உன் துணைவியின் மறைவு

----------------------------
நான் எழுதிய என் முதல் கவிதை
அந்த இனிய இருபதாம் வயதில்.
உண்மையில் தமிழும் நானும்
துரமாகவே இருந்தோம்
கவிதை வரும் வரையில்...

0 மறுமொழிகள்:

Post a Comment

<< முகப்பு