மெழுகுவர்த்தி
இதயத்தில் எரிக்கிறது
மெழுகுவர்த்தி
ஆசைகளாய்
காதலாய்
கனவுகளாய் சேர்ந்து
சுடர் விடும் வாழ்க்கை
சில ஆசைகள் சுடும்
காதல் சுடும்
உருகும் மெழுகாய்
கடமைக்காக
தீ திண்ட தியாகியாய்
தன் உடல் எரித்து
ஒளி கொடுக்கும் மெழுகுவர்த்தி
எடுத்துக்காட்டும்
எத்தனை நிஜ எடுத்துக்காட்டுகள்
நமது பார்வையில்
பல வண்ணம்
பல அளவு
கொண்ட மெழுகுவர்த்தி
சுடரும் ஒளி ஒன்றே
ஞானம் சுட்ட மானிடா
உன் வேற்றுமைகளைக் கிழி
உன் விழிகளில் எரியும்
நெருப்பு அணையும் முன்
படித்துக்கொள்
மெழுகுவர்த்தி பாடம்
'யாதும் நிரந்தரமில்லை!'
புரிந்துக்கொண்டால்
நிறைவாய் வாழ்வாய்
உன் வழியில்
ஒரு சக்கரவர்த்தியாய்!
0 மறà¯à®®à¯à®´à®¿à®à®³à¯:
Post a Comment
<< à®®à¯à®à®ªà¯à®ªà¯